Saturday, June 23, 2007

மக்கள் விருப்பம்


இந்திய நாட்டின் அடுத்த அதிபர் வேட்பாளராக

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பாக நிறுத்தபட்டுள்ள

திருமதி பிரதிபா பட்டில் மக்கள் மத்தியில் எப்படி வரவேற்க்கபடுகிறார் என்பது பற்றி முன்னணி நிறுவனமான யஹூ தனது பயன்பாட்டாளர்களிடம் சர்வே நடத்திவருகிறது அதில் அதிர்ச்சிக்காரமான முடிவுகள் மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது இது வரை அன்நிறுவனம் நடத்தியுள்ள சர்வேயின் முடிவுப்படி திருமதி பிரதிபா அதிபராக வருவதை மக்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது பொருப்பேர்பதர்க்கு

முன்பே மக்கள் செல்வாக்கில்லாத அதிபராக அவர் பேர்எடுப்பது வருத்ததிர்க்குறியது சமீபத்தில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக

அறிவிக்கபட்ட சில தினங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தாழ்த்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது


அதன் மூலமாக ஓட்டு மொத்த இந்திய முஸ்லிம்களின் எதிர்பையும் பெற்று வருகிறார் முக்காடு எதிர்க்கும் அந்த முக்காடு பெண்மணி


யஹூ சர்வே என்ன சொல்கிறது...

பிரதிபா இந்தியாவின் அடுத்த அதிபராக வருவதை ஆதரிக்கிறீர்களா...?


ஆம் 21% 1336 பேர்

இல்லை 74%4794 பேர்

சொல்ல விரும்பவில்லை 6% 361


குடிமக்கள் விரும்பாத கு டியரசு தலைவர்....!

Friday, June 22, 2007

பிரதிபாவிர்க்கு பேராசிரியர் கண்டனம்





ஜூன் 19, 2007 டெல்லி:


பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது, இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில ஆளுனராக உள்ள பிரதீபா பாட்டீல் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் உதய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சியி்ல கலந்து கொண்டு பேசியபோது,
பெண்கள் பர்தா அணிவது தேவையற்றது. பெண்கள் முகத்தை மூடும் பர்தா அணியும் வழக்கம் மொகலாயர் ஆட்சி காலத்தில் ஏற்பட்டது. மொகலாயர்கள் படையெடுத்து வந்து போது அவர்களிடமிருந்து பாதுகாக்கவே பெண்கள் பர்தா அணிந்தனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கூறினார். இவர் இவ்வாறு பேசியிருப்பதற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முஸ்லீம்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல சரித்திர நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதீபாவுக்கு தமுமுக கண்டனம்: இந்நிலையில் பிரதீபா பாட்டீல் கூறிய கருத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை: பர்தா அணிவதும், முக்காடு அணிவதும் பெண் குலத்திற்கு எதிரானது என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். இதை எந்த அடிப்படையில் அவர் கூறியுள்ளார் என்பது தெரியவில்லை. மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும், ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் அவர் உயர்ந்துள்ளார். தனது சேலை முந்தானையால் முக்காடு போட்டுக் கொண்டுதான் இந்தப் பதவிகளுக்கு அவர் உயர்ந்தார் என்பதை மறந்து விடக் கூடாது. பர்தா என்ற கவச உடை, முஸ்லீம் பெண்களின் உரிமையும், கடமையும் ஆகும். அதை விமர்சிப்பதும், குறுகிய நோக்கில் சாடுவதும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின்படி ஆளுநராகப் பதவியேற்றுள்ள ஒருவருக்கு உகந்ததல்ல. பிரதீபா பாட்டீலின் கருத்து முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்தியப் பெண் குலத்துக்கே மாசு கற்பிக்கும் செயலாகும். முகலாயர் காலத்தில்தான் பர்தா அணியும் முறை நடைமுறைக்கு வந்ததாக பிரதீபா பாட்டீல் கூறுவது தவறானதாகும். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தே, இஸ்லாம் இந்தியாவுக்கு வருகை புரிவதற்கு முன்பிருந்தே பர்தா முறை இந்தியாவில் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

Thursday, June 21, 2007

முபாஹலா







கடலூர் முபாஹலாவில் கலீமுல்லாஹ் தலையிலானவர்களின் உயர்ந்த நிலை.
கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தின் பி.ஜெ. வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள் என பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம். காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில் பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றையும் கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் முபாஹலா செய்தார்கள். எனவே .. வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவில் குறிப்பிட்டுள்ளதை தவிர்த்து சுருக்கமாகத் தருகிறோம்.டி.என்.டி.ஜே. மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் பதவி நீக்கம் ஒழுக்கக் கேடு சம்பந்தமானதுதான் என்ற எந்தச் செய்தியும் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது. 11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி.ஜெ.தான் அவராகவே முன் வந்து பாக்கரின் ஒழுக்கக் கேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அப்பொழுதுதான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்குத் தெரியும். அதுவரை எதுவும் தெரியாது.11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு வீட்டில் வைத்து இரவு 12 மணி அளவில் சுமார் ஒண்ணரை மணி நேரம் பாக்கரின் ஒழுக்கக் கேடுகள் பற்றி பி.ஜெ. பேசினார். பலர் கூடி இருந்த அந்த இடத்தில் ஒழுக்கக் கேடுகள் பற்றி விபரமாகப் பேசினார். விலாவாரியாக விளக்கிப் பேசினார் பி.ஜெ. எந்த அளவுக்கு என்றால் பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார். பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன் விவகாரம் உண்மை என்றும் பி.ஜெ. சொன்னார். களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங். அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். என்றும் பி.ஜெ. சொன்னார்.நந்தினியை பாக்கர் அவரது காரில் கூட்டிச் சென்றார் என்றும் பி.ஜெ. சொன்னார்.ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் பாக்கரும் நந்தினியும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார். பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார். இன்னும் பாக்கர் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் பி.ஜெ. சொன்னார். பாக்கர் செய்த தவறுகளையெல்லாம் (பி.ஜெ.யாகிய) நான் பாக்கரிடம் விசாரித்தபொழுது முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தார். பிறகு ஆதாரங்களை காட்டி போது பாக்கர் ஒப்புக் கொண்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று கேட்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.ஸைபுல்லாஹ் ஹாஜாவையும் ஒரு பெண்ணையும் தொடர்புபடுத்தி பாக்கர் குற்றச்சாட்டு வைத்தார் என்றும் பி.ஜெ. சொன்னார்.விபச்சாரம் செய்ததாக ஒருவர் பொய் சொன்னால் 80 கசையடி என்ற சமாச்சாரம் எதையும் பலர் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் பி.ஜெ. சொல்லவில்லை. மொத்தத்தில் அன்று பி.ஜெ. பாக்கர் அதிகப்படியாக தவறுகள் செய்துள்ளார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதிலேயே பி.ஜெ. குறியாக இருந்தார். பாக்கர் பற்றி பி.ஜெ. போனில் குற்றச்சாட்டு கூறியபொழுது இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும். எனவே பாக்கர் விஷயத்தில் அவசரப்படாதீர்கள் என்று கலீமுல்லாஹ் சொன்னது போலவே கூடி இருந்தவர்களும் இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும் அவசரப்பட்டு பேசாதீர்கள் என்று பி.ஜெ.யிடம் சொன்னார்கள். இதை மறுத்த பி.ஜெ. அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இரண்டு மாதத்திற்கு மேலாக பல பேரிடம் தீர விசாரித்த பின்பே ஆதாரங்களின் அடிப்படையிலேதான் இந்த முடிவுக்கு வந்தோம் என்று பி.ஜெ. கூறினார். இப்படி பாக்கர் நந்தினி பற்றி பி.ஜெ. கூறியுள்ள அனைத்தையும் கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. தலைவர் கலீமுல்லாஹ் முபாஹலாவில் சொல்லிக் காட்டுகிறார். இவ்வளவு விஷயங்களை சொல்லிக் காட்டி கலீமுல்லாஹ் செய்த முபாஹலா துஆவின் போது கலீமுல்லாஹ்வும் அவரது தலைமையில் உள்ளவர்களும் உயர்ந்த பண்பாளாகள் என்பதை நிரூபித்து விட்டார். அந்த துஆவை பாருங்கள். பி.ஜெ. பாக்கர் பற்றி இப்படி கூறியது முற்றிலும் உண்மை. இது பொய் என்றால், இதில் பொய்யர்கள் நாங்கள் என்றால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். இது உண்மை என்றால் பி.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ் அவனது சாபத்தை உண்டாவதற்கு பதிலாக பி.ஜெய்னுல் ஆபிதீன் எங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏகத்துவத்தை ஊட்டியதற்கு பகராமாக பி.ஜெ. செய்த குற்றங் குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் மீது வரம்பு மீறிய பொய்களையும் தவறான அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி பேசியும் எழுதியும் வருகிறதை தடுத்து யா அல்லாஹ் பி.ஜெ.க்கு நேரான வழியை காட்டு.இது மாதிரிதான் கலீமுல்லாஹ் தலையிலான அனைவரும் துஆச் செய்தார்கள். இந்த கடலூர் முபாஹலா மூலம் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார் என்றுதான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் கூறி உள்ளார்கள். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை என்று திசை திருப்பி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார். நந்தினிக்கு பட்டுப்புடவை, தனி வீடு, செல் போன், தவறான உறவு, நந்தினி வீட்டில் பாக்கர் என்பது உட்பட பி.ஜெ. சொன்ன அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் முபாஹலா செய்தார்கள். இவற்றையெல்லாம் பி.ஜெ. வார்த்தைக்கு வார்த்தை மறுக்கவில்லை. பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் என்று நழுவி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறியது. இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது. அந்த நேரத்தில் பாக்கர் என் வீட்டில்தான் தங்கி இருந்தார் என்று அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.இதையெல்லாம் பார்த்த பின் மானமுள்ள எவனாவது தனது பிள்ளைகளை, சகோதரிகளை த.த.ஜ. நடத்தும் பெண்கள் கல்லூரிக்கு பாடம் படிக்க அனுப்புவானா? இவர்கள் நடத்திய பாடத்தின் லட்சணம்தான் நந்தினி - நஜ்முன்னிஸா என நாட்டியம் ஆடுகிறது. பாக்கர் நந்தினி, பி.ஜெய்னுல் ஆபிதீன் நஜ்முன்னிஸா ஆகியவர்களின் மர்மக் கதைகளை ஜொள்ளு விட்டு படிக்க ஆசைப்பட்டவர்கள்தான் இவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு நன்கொடை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.. பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று பாக்கர் கேட்டார் என்பது ஷம்சுல்லுஹா கூறியதை நினைவுபடுத்துகிறது. மதுரையில் 2000இலல் நடந்த இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு பி.ஜெ. அதிகமாக வரவே இல்லை. பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே பி.ஜெ. சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் மேலப்பாளையம் அல் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று ஷம்சுல்லுஹா கூறினார். இந்த தகவலை முன்பே வெளியிட்டிருக்கிறோம்.கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யும் பி.ஜெ.யிடமிருந்து மேலப்பாளையம் அல் இர்ஷாத் மாணவிகளை காப்பாற்றிய சுலைமானுக்கும் ஷம்சுல்லுஹாவுக்கும் மேலப்பாளையவாசிகள் நன்றி கூற வேண்டும்.
posted by பஸ்லுல் இலாஹி

Monday, June 18, 2007

2020ம் ஆண்டு பிரம்மாண்டமான விமானநிலையம் தமிழ்நாட்டில்...


சென்னையில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்த தமிழக மற்றும் மத்திய அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்
புதிய விமானநிலையம் சென்னைக்கு அருகில் உள்ள
ஸ்ரீ பெரும்புத்தூரில் நிறுவபடலாம் என தகவல்கள் கூறுகிறது
அப்படி அமையபோகும் விமானநிலையம் ஆசியாவிலேயே
மிக பிரம்மாண்டமான விமானநிலையமாக இருக்குமாம்
சுமார் 2020ம் ஆண்டில் பயணிகளின் பயன்பாட்டிற்க்கு இவ்விமானநிலையம் திறக்கப்படலாமென அறியப்படுகிறது
கீழே உள்ள விமானநிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார வரைபபடங்களை பாருங்கள்
2020ம் ஆண்டு நம்ம தமிழ்நாடு எப்படி இருக்கிறது...!